News April 25, 2025
சுட்டுக் கொன்றதும் வெடித்து சிரித்த தீவிரவாதிகள்

பஹல்காம் தாக்குதலின் போது தீவிரவாதிகள் செய்த கொடூர செயல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. நெற்றியில் இருந்த பொட்டை அழித்து, அல்லாஹு அக்பர் சொன்ன பிறகும் தீவிரவாதிகள் தனது கணவர், அவரது நண்பரை கொன்றதாக தாக்குதலில் கொல்லப்பட்ட புனேவைச் சேர்ந்த கௌஸ்துப்பின் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவரை சுட்டுக் கொன்ற பின் தீவிரவாதிகள் வெடித்து சிரித்ததாக குஜராத்தைச் சேர்ந்த ஷீதல் கூறியுள்ளார்.
Similar News
News April 26, 2025
25% விலை குறைவான 18 கேரட் தங்கம்.. அதிகரிக்கும் மவுசு

ஆபரண நகைகளில் 22 கேரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் நாணயம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த 2 வகைகளில், 24 கேரட் விலை அதிகமாகும். 22 கேரட் விலை சற்று குறைவாகும். ஆனால் இந்த 2 வகைகளையும் விட 18 கேரட் விலை 25% குறைவு. 24 கேரட், 22 கேரட் விலை அதிகரிப்பதால், அனைவரின் பார்வையும் 18 கேரட் தங்கம் மீது திரும்பியுள்ளது. அதற்கான மவுசும் அதிகரித்துள்ளது.
News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் அஞ்சலி

காலமான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியனும் அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் அஞ்சலி

காலமான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியனும் அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.