News April 25, 2025
படித்த இளைஞர்களுக்கு திமுக அரசு துரோகம்: இபிஎஸ்

அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான (Group 4 ) அறிவிப்பை மட்டும் திமுக அரசு வெளியிட்டுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது TNPSC தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என சாடிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படாமல், உடனே Group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும் என்றார்.
Similar News
News September 16, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

RBI நிதிக் கொள்கை கூட்டம் செப்.29-அக்.1 வரை நடைபெறவுள்ளது. morgan stanley அறிக்கையின்படி தற்போது சாதகமான சூழல் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறையும். GST வரிவிகித மாற்றம் காரணமாக பைக், கார்களின் விலை குறைய உள்ள நிலையில், இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 16, 2025
வங்கியில் வேலை, தேர்வு கிடையாது; அப்ளை பண்ணுங்க

SBI வங்கியில் சிறப்பு அதிகாரி, மேலாளர் பதவிகளுக்கு 156 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ₹85,920-₹1,05,280 வரை வழங்கப்படும். Specialist Officer பதவிக்கு எழுத்து தேர்வு கிடையாது. மேலாளர் பதவிக்கு 28-35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். MBA(Finance), MMS(Finance),CA, CFA முடித்தவர்கள் அக்.2-க்குள் https://sbi.co.in/web/careers/current-openings – ல் விண்ணப்பியுங்கள்.
News September 16, 2025
ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷம்: ஆர்.பி.உதயகுமார்

ஒற்றுமை என்ற பெயரில் செல்லாக்காசுகள் புதிதாக கோஷம் எழுப்புவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். சிலர் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுக விலாசத்தை சிதைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றனர். EPS-க்கு பலவீனத்தை ஏற்படுத்த நினைக்கும் செல்லாக்காசுகளின் திட்டம் ஒருகாலத்திலும் நடக்காது என்றும், சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.