News April 25, 2025
படித்த இளைஞர்களுக்கு திமுக அரசு துரோகம்: இபிஎஸ்

அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான (Group 4 ) அறிவிப்பை மட்டும் திமுக அரசு வெளியிட்டுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது TNPSC தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என சாடிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படாமல், உடனே Group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும் என்றார்.
Similar News
News March 16, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கும் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT
News March 16, 2026
ரஜினியிடம் ஆதவ் மன்னிப்பு கேட்கணும்: நயினார்

திமுக மிரட்டியதாலேயே ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிய ஆதவ் அர்ஜுனாவிற்கு, நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளரான ரஜினி குறித்து ஆதவ் பொதுவெளியில் தவறாகப் பேசியது ஏற்புடையதல்ல என்று X தளத்தில் நயினார் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ரஜினி & அவரது ரசிகர்களிடம் ஆதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News March 16, 2026
WOW.. 189 வருடங்களுக்கு பின் கண்டறியப்பட்ட செடி

அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 189 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் அரிதான மூலிகை செடி ஒன்று மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. Henckelia monophylla என்ற இச்செடியை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் பார்க்கவில்லை. தற்போது, இது லோஹித் மாவட்டத்தில் தென்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இது மாநிலத்தின் பல்லுயிர் செழுமைக்கு எடுத்துக்காட்டு என அம்மாநில CM தெரிவித்துள்ளார்.


