News April 25, 2025
இந்துக்கள் அதை செய்யவே மாட்டார்கள்: மோகன் பகவத்

தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 29, 2025
உற்பத்தி பாதிப்பு.. முட்டை விலை அதிகரிக்குமா?

நாமக்கல் மண்டலத்தில் வெயில் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தால் முட்டையிடும் கோழிகள் நாள்தோறும் உயிரிழந்து வருவதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோழிகள் உணவு உண்ணும் அளவும் குறைந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால், முட்டை விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக உள்ளது.
News April 29, 2025
மத்தியஸ்தத்திற்கு வந்துள்ள இஸ்லாமிய நாடுகள்

இந்தியா-பாக். இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என இந்தியா உக்கிரமாக உள்ளது. இந்நிலையில், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல், இந்தியா-பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் பேசியுள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க தயார் என ஈரானும் முன்வந்துள்ளது.
News April 29, 2025
மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.