News April 25, 2025
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் என 6 – 8 வயது வரை உள்ள குழந்தைகள், 12ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இதுபோன்று, இல்லத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை *SHARE* பண்ணுங்க
Similar News
News April 26, 2025
தூத்துக்குடி அருகே புதிய காற்றழுத்த சுழற்சி

தமிழகத்தில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டி உள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய காற்றழுத்த சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று உங்கள் பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்.
News April 26, 2025
ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
News April 26, 2025
தூத்துக்குடி: இன்று ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

ஸ்ரீவைகுண்டம் – திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் நவதிருப்பதிகளில் ஒரு தலமாகும். இக்கோயிலில் இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.