News April 25, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News October 31, 2025
இந்தியா- ஆஸ்திரேலியா T20-யில் மழை குறுக்கிடுமா?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி இன்று மெல்போர்னில் மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், போட்டி தொடங்கும் நேரத்தில், மழை பொழிவதற்கு 66% வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. முதல் T20 மழையால் ரத்தாகியது போலவே, இந்த போட்டியையும் மழை கெடுத்துவிடுமோ என்ற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
News October 31, 2025
இன்று நள்ளிரவு முதல் அமல்.. முக்கிய அறிவிப்பு

✱CRED, MobiKwik போன்ற 3-ம் தரப்பு செயலிகள் வழியாக SBI கார்டு வைத்து பள்ளி/கல்லூரி கட்டணங்களை செலுத்தினால், பரிவர்த்தனை தொகையில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும் ✱ஆதார் புதுப்பித்தலை எளிதாக ஆன்லைனில் மாற்றலாம். அதே போல, Biometric அப்டேட் செய்யும் கட்டணம் ₹100-ல் இருந்து ₹125 ஆக உயர்த்தப்படுகிறது ✱இனி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகள், லாக்கர்களுக்கு 4 நாமினிகளை நியமிக்கலாம். SHARE IT.
News October 31, 2025
எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்

தூய்மை இந்தியா முன்னெடுப்பு இருந்தாலும், நாடு தூய்மையான பாடில்லை. குப்பை தொட்டியை தவிர அனைத்து இடங்களிலும் கிடக்கும் குப்பைகள், நீர் நிலைகளில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் என மோசமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இதற்காக வாரணாசி மாநகராட்சி கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரோட்டில் எச்சில் துப்பினால், குப்பை போட்டால் ₹200 அபராதம் என அறிவித்துள்ளது. இங்கும் இது அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்?


