News April 25, 2025
188 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இன்று அட்டாரி வாகா எல்லை வழியாக 188 பாகிஸ்தானியர்கள் வெளியேறியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தானில் இருந்து 286 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களைக் கண்டறிந்து வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார்.
Similar News
News April 26, 2025
திமுக-வின் அலட்சியத்தால் உயிரிழப்பு: இபிஎஸ்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
News April 26, 2025
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

இஸ்ரோ Ex தலைவர் <<16213450>>கஸ்தூரி ரங்கன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விண்வெளி துறையில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளதாக தெரிவித்த CM ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
News April 26, 2025
இந்தியாவின் பாக். மருமகளுக்கு அடைக்கலம் கிடைக்குமா?

2023-ல் பாக். ல் இருந்து நேபாளம் வழியாக உ.பி வந்து தனது காதலரான சச்சின் மீனாவை மணந்தவர் சீமா ஹைதர். இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களின் விசாக்களுக்கு இந்தியா கெடு விதித்துள்ள நிலையில், தான் பாகிஸ்தானின் மகள், ஆனால் இந்தியாவின் மருமகள் எனக் கூறும் சீமா, தன்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு அரசிடம் சட்ட ரீதியாக முறையிட்டுள்ளார்.