News April 25, 2025
கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.25) மாலை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மாலை நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
Similar News
News April 28, 2025
கடலூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 28, 2025
சத்துணவு மையத்தில் வேலை: கடைசி வாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <
News April 28, 2025
லிப்ட் கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

விருதாச்சலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் லிப்ட் கொடுத்தனர். பாதி வழியில் இறங்கி இவரை தாக்கி பணம், செல்ஃபோனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.