News April 25, 2025
4 இடங்களில் 40 டிகிரி செல்சியஸை தொட்ட வெயில்

தமிழகத்தில் இன்று 4 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக சுட்டெரித்தது. கரூர் பரமத்தி & மதுரை ஏர்போர்ட்டில் வெப்பம் 40.5 டிகிரியாக பதிவானது. திருச்சியில் 40.1 & வேலூரில் 40 டிகிரி என வெப்பம் சுட்டெரித்தது. அடுத்தபடியாக, ஈரோடு 39.6 டிகிரி, சேலம் 39.5 டிகிரி, என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் வெயில் 37.3 டிகிரியாக ரெகார்ட் ஆனது.
Similar News
News November 3, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காமல், வங்கிகள் சிறப்பு அறிவிப்பை வெளியிடாமல் உங்களின் கடன் EMI தொகையை குறைக்க முடியும். அதற்கான அறிவிப்பை RBI வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்களுக்கு கடன் கிடைக்க உதவும் CIBIL SCORE உயர்ந்தால், நீங்கள் ஏற்கெனவே பெற்றிருக்கும் கடன்களின் EMI தொகையை குறைக்கலாம். இதுவரை EMI தொகையை சரியாக செலுத்தி உங்களின் CIBIL SCORE மேம்பட்டிருந்தால் உடனே வங்கியை அணுகுங்கள். SHARE IT
News November 3, 2025
உலகின் மிகவும் குளிர்ச்சியான நாடுகள்

சில நாடுகளில் கடும் குளிரால், பனி மூடிய மலைகள், உறைந்த நதிகள் மற்றும் பனிச்சாரல் நிறைந்த காற்று இருக்கும். குளிர்காலங்களில் வெப்பநிலை மைனஸ் அளவிற்கும் குறைந்து காணப்படும். இது, சிலருக்கு சவாலாகவும், சிலருக்கு ரசனையாகவும் இருக்கும். எந்தெந்த நாடுகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த நாடு எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது வேதனை அளிப்பதாக கூறிய அவர், மத்திய அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுக்கு, உரிய அழுத்தத்தை தமிழக அரசு உண்மையாக கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


