News April 25, 2025
தாக்குதல் நடந்த இடத்தில் வீரர்கள் இல்லாதது ஏன்?

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு வீரர்கள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பைசரன் பள்ளத்தாக்கில் வழக்கமாக அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் போதுதான் பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை அங்கு அழைத்துச் சென்றதால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
Similar News
News April 29, 2025
மர்மமான முறையில் ‘Family Man 3’ நடிகர் மரணம்!

நடிகர் ரோஹித் பாஸ்போர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அசாமைப் சேர்ந்த இவர், ஞாயிறு மதியம் நண்பர்களுடன் அருகிலுள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கும் ரோஹித் சமந்தாவுடன் ‘Family man 3′-ல் ரோஹித் நடித்துள்ளார்.
News April 29, 2025
இந்திய பொருளாதாரத்தை TN மிஞ்சியுள்ளது: CM ஸ்டாலின்

இந்திய பொருளாதாரத்தைவிட TN பொருளாதாரம் உயர்ந்து இருப்பதாக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் TN கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் தேசிய சராசரியை விட TN-ன் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாகக் கூறினார். மேலும், சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 சதவீதத்துடன் TN முதலிடத்தில் இருப்பதாகவும் CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
News April 29, 2025
பாஜகவின் தெலங்கானா புளூபிரிண்ட் இதுதான்..

தெற்கில் பாஜக, தனது அடுத்த இலக்காக தெலங்கானாவை டிக் செய்துள்ளது. ஹைதராபாத் உள்ளாட்சி எம்எல்சி தேர்தலில் ஓவைசி கட்சியிடம் பாஜக தோற்ற போதும், அதன் வியூகம் முக்கிய கட்சியான பிஆர்எஸ்-க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. AIMIM-ஐ வீழ்த்துவதற்கு கட்சி சார்பின்றி எல்லா இந்துக்களும் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தது. இதே வியூகம் 2028 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்கிறார்கள்.