News April 25, 2025
கரூர்: இரிடியம் மோசடி செய்த 6 பேர் கைது !

கரூர் பசுபதிபாளையத்தில் ’சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல் இருடியம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் குமரேசன், பொன்னரசன், ஹரிஷ், தியாகராஜன், சுரேஷ், ராஜ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருடியம் எனக் கூறிய அண்டா சில்வர் பாத்திரம் கெமிக்கல்கள் கார் செல்போன்களை பறிமுதல் செய்து, இன்று(ஏப்.25) சிறையில் அடைத்தனர்.
Similar News
News July 9, 2025
குளித்தலை: நீதிமன்றம் எதிரே திட்டிய நபர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ சிந்தலவாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் குளித்தலை கோர்ட் எதிரே உள்ள மெயின் ரோட்டில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் மணிகண்டன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 8, 2025
சிந்தலவாடி யோக நரசிம்ம சுவாமி கோயில்!

கரூர், கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடியில் புகழ்பெற்ற யோக நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
கரூா்: 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

கரூர், ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 65 மையங்களில், 18 ஆயிரத்து 30 போ் தேர்வு எழுத உள்ளனா். இந்த தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.