News April 25, 2025
PAK பிடியில் உள்ள இந்திய வீரர்தான் துருப்புச்சீட்டா?

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகே சிங்கை, அந்நாடு ஒப்படைக்க மறுத்து வருகிறது. இன்று நடந்த கொடி கூட்டத்திற்கு சிங் வரவில்லை. தவறுதலாக எல்லை தாண்டி வந்ததாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை தங்களது பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவரை வைத்து இந்தியாவிடம் டீல் பேசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 28, 2025
16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ நியூஸ், அக்தர் யூ-டியூப் உள்ளிட்ட யூ-டியூப் சேனல்கள், இந்தியா, இந்திய ராணுவம்- பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவலை பரப்பியதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
News April 28, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை <<16241060>>CM ஸ்டாலின்<<>> வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது. 01.01.2025 தேதியில் இருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ₹10,000-ல் இருந்து ₹20,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News April 28, 2025
பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.