News April 25, 2025

பங்குச்சந்தையில் ₹8 லட்சம் கோடி நஷ்டம்

image

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நிலவுவதால், பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 588 புள்ளிகளை இழந்தது. இன்று ஒரே நாளில் மட்டும், முதலீட்டாளர்கள் சுமார் ₹8 லட்சம் கோடி வரை இழந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 6, 2025

ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்தால்.. தீராத கடனும் தீரும்!

image

சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் போன்றவற்றை வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஒரு இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும்.

News July 6, 2025

கமல்ஹாசனுக்கு அதிரடி தடை: கர்நாடக கோர்ட்

image

இனி கன்னட மொழி, கலாசாரம், இலக்கியம் குறித்துப் பேச நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு கோர்ட் தடை விதித்துள்ளது. தக் லைஃப் பட புரமோசனின்போது தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என பேச அது சர்ச்சையானது. இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்புகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் விளைவாக, கமல் இனி கன்னட மொழி குறித்து பேசக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News July 6, 2025

விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பிரசாந்த் கிஷோர்!

image

தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்(PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளதால் தனது சொந்த கட்சியை(ஜன் சுராஜ்) கவனிக்கவும், சிறிது காலம் ஓய்வுக்காகவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். விஜய் விரைவில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், PK-வின் இந்த முடிவு TVK-வினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.

error: Content is protected !!