News April 25, 2025
திருவள்ளூர் ஆட்சியரகத்தில் ரூ.1.70 கோடியில் படிப்பகம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வலதுபுறம் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் படிப்பகம் அமைக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அமைதியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த உரையாடல்களை மேம்படுத்துவதற்காக இப்படிப்பகம் அமைக்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மு பிரதாப் தெரிவித்தார். *போட்டி தேர்வு மாணவர்களுக்கு பகிரவும்*
Similar News
News October 28, 2025
BREAKING: திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மொந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை (அக்.28) திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 27, 2025
திருவள்ளூர்: வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, திருவள்ளூர், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, திருத்தணி, திருநின்றவூர், பொன்னேரி, ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், ஊத்துக்கோட்டை, திருமழிசை, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் (அக்.27, 28 & 29) ஆகிய தினங்களில் வார்டு அளவில் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் பொதுமக்களை கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
News October 27, 2025
திருத்தணி முருகர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா!

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.


