News April 25, 2025
பாக். துணை பிரதமரின் சர்ச்சை பேச்சு.. தொடரும் பதற்றம்

பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை தடுத்தால் அது போராக பார்க்கப்படும் எனவும் இசாக் தார் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
மூட்டு வலி நீங்க தினமும் இத பண்ணுங்க!

★இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மூட்டு வலிமை அதிகரிக்க ‘ஸ்குவாட்ஸ்’ செய்யுங்க ★செய்முறை: கால்களை தோள்பட்டை அகலத்தை விட சற்று அகற்றி வைத்து நிற்கவும். முதுகை நேராக வைத்து, தோப்புக்கரணம் போடுவது போல Chair position-ல் அமரவும். கைகள் முன்னால் நீட்டி வைத்திருப்பது அவசியம். குதிகால்களில் அழுத்தம் கொடுத்து மேலே எழவும் ★இவ்வாறு 2 செட்களாக ஆரம்பத்தில் 15- 20 வரை செய்யலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
News October 30, 2025
விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பசும்பொன்னில் அமைத்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று CM ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
News October 30, 2025
வீட்டிற்குள் கோலம் போடலாமா?

வீட்டின் வாசலுக்கு முன்னால் கோலம் போடுவது வழக்கம். லட்சுமி தேவியின் நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவேற்பதை முதன்மையான நோக்கமாக கொண்டு, கோலத்தில் ஓம், ஸ்வஸ்திக், லட்சுமி தேவியின் பாதங்கள் போன்றவை பயன்படுத்துவார்கள். வீட்டினுள் கோலம் போடுவதால், அவற்றை மிதிக்க வாய்ப்புள்ளது. இது மங்களகரமான ஆற்றலை மிதிப்பது போன்றது என்பதால், வீட்டினுள் கோலம் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.


