News April 25, 2025

விண்ணப்பித்த 3 நாளில் புதிய மின்சார இணைப்பு: அரசு

image

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 3 நாள்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு வழங்குவதில் EB-க்கு தனிவிதிமுறைகள் உள்ளதாகவும், அதன்படிதான் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 27 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கி தமிழகம் சாதனை படைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 29, 2025

லியோ டால்ஸ்டாய் பொன்மொழிகள்

image

*பொறுமையும் நேரமுமே மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது. *வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது. *வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன. *எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ, அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. *நமக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்வதே உண்மையான ஞானம்.

News April 29, 2025

கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

image

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.

News April 29, 2025

எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!