News April 25, 2025
ராணுவ உடை கடைகளுக்கு கிடுக்குப்பிடி

பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், டேராடூன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ உடைகள் விற்கும் கடைகளுக்கு மாநில போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆதார் கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே ராணுவ உடைகளை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.
News October 30, 2025
கேரளாவில் தொடங்கிய SIR

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


