News April 25, 2025
மயிலாடுதுறை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <
Similar News
News April 25, 2025
ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.
News April 25, 2025
மயிலாடுதுறையில் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே.8ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
News April 25, 2025
நற்கருணை வீரன் விருது அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை விபத்தில் படுகாயமுற்றவா்களை காப்பாற்ற உதவுபவா்களுக்கு நற்கருணை வீரன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். விபத்தில் காயமடைந்தவா்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குபவா்களை ஊக்குவிக்க நற்கருணை வீரன் விருது வழங்கப்படுகிறது. மேலும் ₹5000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.