News April 25, 2025

புதுக்கோட்டை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<> இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News April 25, 2025

புதுக்கோட்டையில் இரவு நேரம் ரோந்து காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது

News April 25, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு <>ஆப்ஷனை க்ளிக்<<>> செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க

News April 25, 2025

வாகனம் மோதி நர்சிங் மாணவி பலி

image

கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (18), இவர் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாயாருடன் புதுக்கோட்டை சென்று விட்டு திரும்பியுள்ளார். பின்னர் அருகிலிருந்த ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு ரோட்டை அவர் கடக்க முயன்றபொழுது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியதில் பிரியங்கா படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!