News April 25, 2025
கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நாவுபாடா(19) என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவரின் உடல் விருதுநகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
விருதுநகர்: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 மானியம்.. APPLY!

விருதுநகர் மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் Subsidy for eScooter என்ற <
News August 14, 2025
விருதுநகர்: தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை வழியாக தினமும் இயக்கப்படும் மதுரை – குருவாயூர் மதுரை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்.10,12ல் மதுரை -குருவாயூர் ரயில்(16327), கொல்லம் வரை மட் டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் செப்.11,13ல் குருவாயூர்-மதுரை ரயில்(16328),கொல்லத்தில் இருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்படும் என அறிவித்துள்ளது.
News August 14, 2025
வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவையில் ஈடுபடுத்தக் கூடாது

சிவகாசியில் சமீப காலமாக பட்டாசு ஆலைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அதிகரித்து வருகிறது. அவர்கள் கூலி அதிகம் கேட்காத காரணத்தால் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மொழி பற்றிய தெளிவு இல்லாத தொழிலாளர்களை அபாயம் நிறைந்த ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.