News April 25, 2025
6 மாதத்திற்கு உள்ளே வரக்கூடாது: கமிஷனர்

கோவையில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், அடிதடி, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து 6 மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 29 ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் 6 மாதங்களுக்கு, கோவை மாநகர பகுதிக்குள் வர தடை விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News August 14, 2025
கோவையில் கொட்ட போகும் மழை

மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
News August 14, 2025
கோவை: இலவச பட்டா பெற இதை செய்யுங்கள்!

கோவை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
கோவையில் ₹1.65 லட்சம் மானியம் கலெக்டர் அறிவிப்பு

கோவை மக்களே சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மானியமாக ரூ.1,65,625/ வழங்கப்படும். இதற்கு தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம் என என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாா் தெரிவித்துள்ளார்.(SHARE பண்ணுங்க)