News April 25, 2025
புதுவையில் ரவுடிகளின் மனைவிகள் கைது

ஒதியஞ்சாலை பகுதியில் வசிக்கும் மின்துறை அதிகாரி பன்னீர்செல்வம் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அவரை அந்தப் பெண், அவரது தோழிகளுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம், பழைய பூரணாங்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை, பெரம்பை சுகந்தி, வாணரப்பேட்டை அம்மு என்பதும், 3 பேரும் ரவுடிகளின் மனைவிகள் என்பதும் தெரியவந்ததையடுத்து, அவர்களை கைது செய்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
புதுச்சேரி: செல்வ வளம் வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இது சனிபகவான் ஸ்தலமாகவும் அறியப்படுகிறது, இங்கு சனிக்கு உரிய பரிகாரங்களை செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கோயிலுக்குச் செல்வதால் சனி தோஷங்கள் நீங்கி, நல்வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 25, 2025
புதுச்சேரி: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<
News August 25, 2025
வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.