News April 25, 2025
செந்தில் பாலாஜி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவு செய்ய செந்தில் பாலாஜிக்கு SC 28ம் தேதி வரை கெடு விதித்தது. இன்று 25-ம் தேதியாகும். ஆதலால், செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாள்களே அவகாசம் உள்ளது. பெரும்பாலும் அவர் ராஜினாமா செய்யவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் செந்தில் பாலாஜி ஆலோசித்து வருவதாகவும், இன்று அல்லது நாளை ராஜினாமா குறித்து அவர் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Similar News
News April 25, 2025
வீடுகளுக்கு மானிய விலை இண்டர்நெட்

மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்படுவது போல, 100 Mbps வேகத்தில் மாதம் ₹200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதனால், மக்களுக்கு எளிதாக இணைய சேவை கிடைப்பது மட்டுமல்லாமல், பணமும் மிச்சப்படுத்த முடியும்.
News April 25, 2025
பஹல்காமில் ஒரு அயோத்தி சசிகுமார்

தனது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது, தன்னையும் தனது குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் இருவர் காப்பாற்றினர் என கேரளாவைச் சேர்ந்த ஆரத்தி சரத் கூறியுள்ளார். அயோத்தி படத்தில், இந்து மத குடும்பத்திற்கு இஸ்லாமியரான சசிகுமார் உதவுவது போன்று பஹல்காமிலும் நிகழ்ந்துள்ளது. மேலும், தந்தையின் சடலம் கிடைக்கும் வரையிலும் அவர்கள் ஆரத்தி உடனே இருந்துள்ளனர்.
News April 25, 2025
பாக். நடிகரின் பாடல்கள் நீக்கம்

பாக். நடிகர் ஃபவாத் கான் – வாணி கபூர் நடித்துள்ள ‘<<16201311>>அபிர் குலால்<<>>’ படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த புதன்கிழமை வெளியாக இருந்த பாடலும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வரும் மே 9-ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலை இப்படத்தின் நாயகன் ஃபவாத் கான் கண்டித்திருந்தார்.