News April 25, 2025

கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

image

ஒரு தாம்பாளத்தில் காகிதத்தை வைத்து, முக்கோணத்தை வரைந்து, மத்தியில் ‘ஓம் சக்தி’ என எழுதுங்கள். தாமரை பூவை வைத்து, உதிரி மல்லிகைப்பூ, ரோஜா கொண்டு ‘ஓம் சக்தி’ என சொல்லி தாமரை மீது போட வேண்டும். இவ்வாறு 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். பிறகு இவற்றை சிறிய துணியில் கட்டி, 3 நாட்கள் பூஜை அறையில் வைத்து, ஏதாவது ஒரு நீர்நிலையில் கொண்டு விட வேண்டும். பூவின் நறுமணம் வீட்டிற்கு செல்வத்தை அளிக்கும்.

Similar News

News April 25, 2025

காப்புரிமை மீறல்.. ₹2 கோடி செலுத்த ரஹ்மானுக்கு உத்தரவு

image

பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற ‘வீரா ராஜா வீரா’ பாடல் ‘சிவ ஸ்துதி’ என்கிற பாடலை காப்பி அடித்து இசையமைக்கப்பட்டதாக கூறி ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின் போது ‘வீரா ராஜா வீரா’ பாடல் தனது அசல் படைப்பு என ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் வழக்கில் முகாந்திரம் உள்ளதால் ₹2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 25, 2025

சாகும் வரை காத்திருந்த தீவிரவாதி

image

தனது கணவரை சுட்டுவிட்டு, அவர் சாகும் வரை காத்திருந்து, பின்னரே தீவிரவாதி அங்கிருந்து சென்றதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ம.பி.யைச் சேர்ந்த சைலேஷின் மனைவி ஷீதல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் சென்ற பிறகும் கூட தங்களுக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ராணுவ வீரரிடம் இது பற்றி சொன்னபோது, ஏன் இங்கு வந்தீர்கள் என அவர் கடிந்து கொண்டதாகவும் ஷீதல் கூறியுள்ளார்.

News April 25, 2025

பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாகா? அப்போ அவர்?

image

தன்னிடம் போதிய அதிகாரமும் இல்லை, தனது துறைக்கு நிதியும் இல்லை என பேரவையிலேயே பேசினார் அமைச்சர் பிடிஆர். இதனால் அதிருப்தியில் உள்ள திமுக தலைமை, செந்தில் பாலாஜி வசம் உள்ள மின்சாரம், மதுவிலக்கு துறையை பிடிஆருக்கு கூடுதல் இலாகாவாக அளிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, <<16197163>>SC-ன்<<>> கிடுக்குப்பிடியால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!