News April 25, 2025

வந்தவாசி அருகே பெயிண்டர் மீது லாரி மோதி பலி

image

வந்தவாசி அடுத்த போஸ்கோபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(35). சென்னையில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் கிராமத்திற்கு வந்த இவர், நேற்று வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலை மருதாடு புறவழிச்சாலையில் சென்றபோது லாரி ஒன்று இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 23, 2025

காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

தி.மலை: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

image

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

News August 23, 2025

தி.மலை: தேங்காய் விழுந்து 6 மாத குழந்தை பலி

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரவடை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி அமுதா. அமுதா தனது 5 மாத பெண்குழந்தையை வீட்டின் வெளியே வைத்திருந்த போது, மரத்தில் இருந்து குழந்தையின் தலையில் விழுந்து பலத்த அடிபட்டது. வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், குழந்தை நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!