News April 25, 2025
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.
Similar News
News April 25, 2025
காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி, தளபதி!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கிறார். அதேபோல், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி காஷ்மீர் சென்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
News April 25, 2025
ராணுவ உடை கடைகளுக்கு கிடுக்குப்பிடி

பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், டேராடூன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ உடைகள் விற்கும் கடைகளுக்கு மாநில போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆதார் கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே ராணுவ உடைகளை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 25, 2025
6-9-ம் வகுப்புகளுக்கு தேர்வு நிறைவு.. விடுமுறை துவக்கம்

1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.