News April 25, 2025
கணவர் இறந்தது தெரியாத மனைவி.. கண்ணீர் கதை

‘என்னுடைய தாய் இதயநோயாளி என்பதால் தந்தை இறந்த செய்தியை அவரிடம் கூறவில்லை, காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என்றே கூறியுள்ளோம்’ என பஹல்காம் தாக்குதலில் மரணமடைந்த கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி கூறியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், சமீபத்தில் இந்தியா வந்து, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை கண்ணீர் கதைகளோ?
Similar News
News November 4, 2025
எந்தெந்த தேதியில் +2 பொதுத்தேர்வு.. முழு விவரம்

* 2/03/25 – தமிழ், மொழிப்பாடங்கள் * 5/03/25 – ஆங்கிலம் * 9/03/25 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் *13/03/25 இயற்பியல், பொருளாதாரம் * 17/03/25 – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், வணிகவியல் * 23/03/25 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் * 26/03/25 – கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல்
News November 4, 2025
ஓவராக பேசிய மேனேஜர்.. கொலை செய்த ஊழியர்!

பெங்களூருவில் IT கம்பெனியில் பணிபுரிந்து வரும் சோமலா வம்சி(24), கண் கூசுவதால் ஆபீசில் உள்ள லைட்டை அணைக்கும்படி, மேனேஜர் பீமேஷ் பாபுவுடன்(41) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, நிதானமிழந்த வம்சி மிளகாய் பொடியை தூவி, பீமேஷ் நெஞ்சில் Dumbbells-ஐ கொண்டு அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பீமேஷ் பாபு மரணமடைந்துள்ளார். கோபத்தால் இன்று இருவரின் வாழ்க்கை அழிந்துவிட்டது!
News November 4, 2025
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாள்கள் வரை விடுமுறை

மார்ச் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை +2 பொதுத்தேர்வும், மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளன. மாணவர்கள் சிரமமின்றி தேர்வுக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் 2 – 5 நாள்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதனால், பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


