News April 25, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 25, 2025

கடலூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 25, 2025

கல் சரிந்து விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

image

விருத்தாசலம் அடுத்த எடையூறை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகள் பவினா (8), இவர் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பவினா நேற்று (ஏப்.24) தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வீடு கட்டுமான பணிக்காக அடுக்கி வைத்திருந்த ஹாலோ பிளாக் கல் சரிந்து பவினாவின் தலையில் விழுந்துள்ளது. இதில் காயமடைந்த சிறுமி பரிதாமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News April 24, 2025

இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

image

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!