News April 24, 2025
மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அப்டேட்

அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுபவர்கள் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் பெற்றாலும், அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எச்ஐவி, பார்கின்சன், தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அரசு துறைகளின் உதவித் தொகை பெற்றாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
மகளிர் உரிமைத் தொகை.. நல்ல செய்தி வந்தாச்சு!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜுன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 3 மாதங்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என Dy CM உதயநிதி கூறி இருந்தார். இந்நிலையில், முறையான அறிவிப்பு கருணாநிதி பிறந்தநாளையொட்டி வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பயனர்களின் வங்கிக் கணக்கில் ஜுலை முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
News April 25, 2025
CSK vs SRH: பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கப் போவது யார்?

புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள CSK, SRH அணிகளுக்கு இனிவரும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா ஆட்டம்தான். இரு அணிகளும் இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளன. இதில், தோல்வி அடையும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கும். இன்றைய போட்டியில் CSK ஜெயிக்குமா?
News April 25, 2025
போரை நிறுத்துங்கள்.. புடினிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

உக்ரைனை உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், கீவ் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘மிகவும் மோசமான நேரம். புதின் நிறுத்துங்கள். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.