News April 24, 2025
இந்தியா எப்படி தாக்குதல் நடத்தும்? (1/2)

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், 2 வழிகளில் தாக்குதல் நடத்தலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். 1)எல்லையை (LOC) கடந்து தாக்குவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாக்., ஆக்கிரமித்துள்ள POK காஷ்மீரை கைப்பற்றலாம். இதன்மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் (சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து). 2) நவீன ஏவுகணைகள் மூலம் துல்லிய தாக்குதல். (பார்க்க பகுதி-2)
Similar News
News April 25, 2025
செந்தில் பாலாஜி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவு செய்ய செந்தில் பாலாஜிக்கு SC 28ம் தேதி வரை கெடு விதித்தது. இன்று 25-ம் தேதியாகும். ஆதலால், செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாள்களே அவகாசம் உள்ளது. பெரும்பாலும் அவர் ராஜினாமா செய்யவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் செந்தில் பாலாஜி ஆலோசித்து வருவதாகவும், இன்று அல்லது நாளை ராஜினாமா குறித்து அவர் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
News April 25, 2025
கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

ஒரு தாம்பாளத்தில் காகிதத்தை வைத்து, முக்கோணத்தை வரைந்து, மத்தியில் ‘ஓம் சக்தி’ என எழுதுங்கள். தாமரை பூவை வைத்து, உதிரி மல்லிகைப்பூ, ரோஜா கொண்டு ‘ஓம் சக்தி’ என சொல்லி தாமரை மீது போட வேண்டும். இவ்வாறு 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். பிறகு இவற்றை சிறிய துணியில் கட்டி, 3 நாட்கள் பூஜை அறையில் வைத்து, ஏதாவது ஒரு நீர்நிலையில் கொண்டு விட வேண்டும். பூவின் நறுமணம் வீட்டிற்கு செல்வத்தை அளிக்கும்.
News April 25, 2025
RCB போல் நாங்களும்… CSK கோச் ஃப்ளெம்மிங் கருத்து!

CSK அணி இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 2 மட்டுமே வெற்றி பெற்று பரிதாப நிலையில் உள்ளது. ஆனால், அடுத்த வரும் 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம் என CSK பயிற்சியாளர் ஃபெளம்மிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலையில் இருந்து, கடந்த ஆண்டு RCB தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். CSK பிளே ஆஃப் செல்லுமா? உங்கள் கருத்து என்ன?