News April 24, 2025
இந்த நாயகியை பாராட்டலாமே!

தீவிரவாத தாக்குதலுக்கு ஒரு சில பிரபலங்கள் கண்டனம் தெரிவிக்கவே யோசிக்கும் நிலையில், தெலுங்கு நடிகை அனன்யாவின் செயல்பாடு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த மதுசூதனன் உடலுக்கு நடிகை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 25, 2025
ஏப்ரல் 25: வரலாற்றில் இன்று

▶ உலக மலேரியா நாள். ▶ 1874 – ரேடியோவை கண்டுபிடித்த இயற்பியலாளர் மார்க்கோனி பிறந்த நாள். ▶ 1906 – எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த நாள். ▶ 1912 – தமிழ் அறிஞர் மு. வரதராசன் பிறந்த நாள். ▶ 1644 – சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென் தற்கொலை செய்து கொண்டார். ▶ 2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
News April 25, 2025
அப்பாடா.. சொந்த மண்ணுல ஜெயிச்சிட்டோம்!

இதுதான் RCB ரசிகர்களோட தற்போதைய ரியாக்ஷன். வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணிக்கு, சொந்த மைதானமான பெங்களூருவில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறது RR அணி. சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளில் தோற்ற RCB, நேற்றைய போட்டியில் வாகை சூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடிய RCB, 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.
News April 25, 2025
போருக்கு தயாராகும் பாகிஸ்தான்!

இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாக். ராணுவம் அதிகரித்து வருகிறது. பதுங்கு குழியில் இருந்து மட்டுமே கண்காணிக்கவும், ராவல்பிண்டியில் உள்ள 10 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர உஷார் நிலையில் இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய எல்லை பகுதி மட்டுமில்லாமல், சர்வதேச எல்லைகளான சியால்கோட், குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்து வருகிறது.