News April 24, 2025

இந்தியாவிற்கு துணை நிற்போம்: இஸ்ரேல் PM மீண்டும் உறுதி

image

PM மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய இஸ்ரேல் PM நெதன்யாகு பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். இந்தியாவிற்கு எப்போதும் துணை நிற்போம் என நெதன்யாகு மோடியிடம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி காட்டுமிராண்டி தனமாக நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் விரிவாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.

Similar News

News January 12, 2026

சிறு தீங்கு நேர்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு: EPS

image

திமுக அரசால் கைதாகி <<18797386>>வீட்டுச் சிறையில் உள்ள <<>>இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு CM முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என EPS கூறியுள்ளார். தொடர்ந்து 17-வது நாளாக அறவழியில் போராடி வரும் அவர்களை மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது என்றும், கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துவதாகவும் EPS குறிப்பிட்டுள்ளார்.

News January 12, 2026

ALERT! உங்கள் ஆதார் Misuse ஆகுதா?

image

உங்கள் ஆதாரை வேறு யாராவது உங்களுக்கு தெரியாமல் யூஸ் பண்றாங்களா என்பதை எளிதாக கண்காணிக்கலாம். ➤myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➤ஆதார் எண் & OTP-ஐ உள்ளிட்டு Login செய்யுங்கள் ➤அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்கள் ➤இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம் ➤முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால் 1947 என்ற எண்ணில் புகாரளியுங்கள். SHARE.

News January 12, 2026

BIG BREAKING: இந்திய நாடே சோகத்தில் ஆழ்ந்தது

image

இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் லாஞ்ச் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்று காலை 10.17 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப்பாய்ந்தது PSLV C-62 ராக்கெட். ‘EOS-N1 Anvesha’ செயற்கைகோள் ஏந்திச் சென்ற இது 3வது ஸ்டேஜில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கெனவே 2025 மே மாதத்தில் அனுப்பப்பட்ட PSLV C 61 ராக்கெட்டும் 3-வது ஸ்டேஜில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!