News April 24, 2025
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை

தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
குற்றால அருவிகளில் தொடர் விடுமுறை கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்தால் விழாக்கோலம் போல் காட்சியளித்தது.
News December 29, 2025
தென்காசி: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News December 29, 2025
தென்காசி சாலை விபத்தில் இளைஞர் பலி

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் கிராமத்தை சார்ந்த சற்குணம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான கீழக்களங்கள் வந்திருந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற போது வேறு ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். அவரது இரு கண்களையும் குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.


