News April 24, 2025

பிரதமர் பிஹார் சென்றது ஏன்? திருமா கேள்வி

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை பிஹார் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு PM மோடி பயன்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்திற்கு செல்லாமல் பிஹார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றது அதிர்ச்சியளிப்பதாகவும், அது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அமித் ஷா கூறிய பிறகுதான் இக்கொடூர நிகழ்வு நடந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 25, 2025

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

image

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.

News April 25, 2025

பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய RR?

image

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் கட்டாயமாக 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால், RR அணி 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், எஞ்சிய 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஒருவேளை மற்ற அணிகளின் ரன்ரேட் குறைவாக இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுவும் ரொம்ப ரொம்ப கஷ்டமே.

News April 25, 2025

அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

image

பஹல்காம் தாக்குதல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!