News April 24, 2025
இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இருநாடுகளும் எல்லைகளில் படைகளை குவித்தும், ஏவுகணைகளை சோதனை செய்தும் வருகின்றன. சர்வதேச ஒப்பந்தங்கள், வர்த்தகங்களை ரத்து செய்துள்ளன. மறுபுறம், குடியரசுத் தலைவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்.-ஐ எப்படி பழிவாங்குவது என்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
Similar News
News April 25, 2025
வசூல் வேட்டையாடும் ‘ரெட் டிராகன்’..!

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் மட்டும் 2 வாரங்களில் செய்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. மாஸ் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ₹200 கோடி வசூலை கடந்துவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 2 வாரங்களில் ₹172.3 கோடி வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
News April 25, 2025
மாஸ் சாதனை படைத்த ‘கிங்’ கோலி..!

டி20 போட்டிகளில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி மற்றொரு சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். முதல் பேட்டிங்கின்போது அவர் ஒட்டுமொத்தமாக 62 அரைசதங்கள் அடித்து உலகளவில் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில், கோலிக்கு அடுத்தபடியாக, பாபர் ஆசம்(61), கிறிஸ் கெய்ல்(57), டேவிட் வார்னர் (55) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோலியின் இந்த சாதனையை முறியடிப்பது யார்?
News April 25, 2025
கணவர் இறந்தது தெரியாத மனைவி.. கண்ணீர் கதை

‘என்னுடைய தாய் இதயநோயாளி என்பதால் தந்தை இறந்த செய்தியை அவரிடம் கூறவில்லை, காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என்றே கூறியுள்ளோம்’ என பஹல்காம் தாக்குதலில் மரணமடைந்த கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி கூறியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், சமீபத்தில் இந்தியா வந்து, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை கண்ணீர் கதைகளோ?