News April 24, 2025

வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு.. முக்கிய ஆலோசனை

image

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளது. மேலும் இந்தியாவின் முடிவிற்கு மற்ற நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைக்க உள்ளார்.

Similar News

News January 18, 2026

வாக்குகளுக்காக நிலத்தை தாரைவார்த்த காங்கிரஸ்: PM

image

காங்., ஆட்சியில் பல தசாப்தங்களாக ஊடுருவல் அதிகரித்து வந்ததாக PM மோடி விமர்சித்தார். அசாமில் ₹6,957 கோடியிலான காசிரங்கா உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர், காங்., வாக்கு வங்கி அரசியலுக்காக அசாம் மாநிலத்தின் நிலத்தை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, அசாமின் அடையாளத்தை பாஜக பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News January 18, 2026

ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹6,000 வரை உயர்ந்தது

image

பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் பர்ஸை பதம் பார்த்துள்ளது. டிக்கெட் கட்டணம் சாதாரண நாள்களை விட 3 மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, மதுரை – சென்னைக்கு ₹6,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதனை அரசு தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News January 18, 2026

இன்று மாலை மீண்டும் டெல்லி விரையும் விஜய்

image

சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக CBI முன் விஜய் நாளை ஆஜராக உள்ளார். ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை 7 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!