News April 24, 2025
குமரியில் 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி – ஆட்சியர்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஏப்.24) விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசும்போது;குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது.அந்த குளங்களில் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகளின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.6.98% விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.மேலும் 724 குளங்களில் மண் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Similar News
News April 24, 2025
குமரி: திருவள்ளுவர் சிலை பற்றிய குறிப்புகள்

குமரி முனையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் சில குறிப்புகள்; 133 அடி கொண்ட அந்த சிலை அமைக்கும் பணி 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000 ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிலை 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிலையின் மொத்த எடை 7000 டன். சிலையின் எடை 2500 டன். பீடத்தின் எடை 1500 டன். பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3000 டன் ஆகும். Share It.
News April 24, 2025
நீர்நிலைகளில் போலீஸ் ரோந்து – எஸ் பி உத்தரவு

கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நீர்நிலைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
News April 24, 2025
பிளஸ் டூ மாணவர்களுக்கான தனித்துவப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு குமரி மாவட்டத்தில் ஏப்.29,30 தேதிகளில் நடக்கிறது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்று அதில் அவர் கூறி உள்ளார். *ஷேர்