News April 24, 2025
பாகிஸ்தானியர்கள் வெளியேற TN அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தொழில், வர்த்தகம், மருத்துவ ரீதியாக வந்த பாகிஸ்தானியர்களின் விபரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடந்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
Asia Cup: பாதியில் விலகிய இந்திய ஆல்ரவுண்டர்!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின், ரிசர்வ் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர், தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் இங்கிலாந்தின் கவுண்டி அணியான ஹேம்ஷேர் அணிக்காக விளையாடவுள்ளதால், தொடரில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 4 போட்டிகளிலும் ஒரு சதம் உள்பட 284 ரன்கள் குவித்து, 7 விக்கெட்களையும் சுந்தர் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 12, 2025
டெல்லியை புறக்கணிக்கிறாரா அண்ணாமலை?

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கும் அண்ணாமலை செல்லவில்லை. அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருந்ததால் போகவில்லை என விளக்கமும் கொடுத்திருந்தார். இது உள்கட்சி உரசலாக இருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
News September 12, 2025
பெண்களின் ஹார்மோன்.. இதை கட்டாயம் பாருங்க

பெண்களின் ஹார்மோன் சமநிலை, உடல், மன நலனுக்கு மிகவும் அவசியம். இதில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் மாதவிடாய் சுழற்சி, மனநிலை, தூக்கம், சருமம், முடி, உடல் எடையில் மாற்றங்கள் ஏற்படலாம். *ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதில் தூக்கத்தின் தரம் முக்கியமானது. *மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தலாம். *செர்ரிகள், ஆளி விதைகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். டேக் கேர் Sisters..