News April 24, 2025

வேலூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 24, 2025

ரவுடி நாகேந்திரன் மீண்டும் வேலூர் சிறையில் அடைப்பு

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வேலூர் சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நாகேந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

News April 23, 2025

வேலூர் காவல் துறை சார்பில் செய்தி குறிப்பு

image

வேலூர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உங்கள் பகுதியில் விற்கப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, உங்களின் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகாரளிக்க, Drug Free Tamil Nadu தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்ட செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல். 23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!