News April 24, 2025
நயன்தாராவுடன் மோதலா?.. சுந்தர்.சி ஓபன் டாக்!

‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பின்போது நயன்தாராவுடன் மோதல் என பரவிய செய்திக்கு படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பதிலளித்துள்ளார். நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகை எனக் குறிப்பிட்ட சுந்தர்.சி, தனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விளக்கமளித்துள்ளார். இதுபோன்று வெளியாகும் கிசுகிசுகளுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 24, 2025
கற்பனையில் நினைக்காத வகையில் பதிலடி: PM மோடி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என PM மோடி எச்சரித்துள்ளார். பிஹாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கும் எனக் கூறினார்.
News April 24, 2025
இந்த நேரத்தில் தயவு செய்து போனை யூஸ் பண்ணாதீங்க!

நார்மலாகவே போன் அதிகமாக ஹீட்டாகும். அது, சம்மர் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஏன், போன் வெடிக்கும் அபாயமும் ஏற்படலாம். அப்படி போன் அதிக ஹீட்டானால், நமக்கு ஒரு எச்சரிக்கை மெசெஜ் வரும். அது மாதிரியான நேரத்தில், என்ன வேலையாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் போனை யூஸ் பண்ணாதீங்க. போனை கொஞ்சம் நேரம் நிழலான இடத்தில் வைத்துவிட்டு, பிறகு யூஸ் பண்ணுங்க. SHARE IT.
News April 24, 2025
‘எடப்பாடியாரை வணங்கி’ செங்கோட்டையன் புகழாரம்!

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ‘எடப்பாடியாரை வணங்கி’ என செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் இபிஎஸ் நல்லாட்சி நடத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல் இருப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?