News April 24, 2025
பயங்கரவாதம்.. ஓரணியில் நிற்க வேண்டும்: ஷமி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை கண்டித்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய வன்முறை நமது சமூக கட்டமைப்பை மட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 17, 2025
PMK-வினர் மனங்களை எக்ஸ்ரே எடுத்து கூட்டணி: ராமதாஸ்

CM ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார். 2026 தேர்தலில் இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமையும் என்றார். மேலும், பாமகவினரின் மனங்களை எக்ஸ்ரே எடுத்து பார்த்து அனைவரது மனங்களும் குளிரும் வகையில் கூட்டணி முடிவை எடுப்பேன் என உறுதியளித்தார். குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
News August 17, 2025
ED ரெய்டுக்கு காரணம் நெல்லை விருந்தா?

அமைச்சர் ஐ.பி., உள்பட மேலும் சில அமைச்சர்கள் ED பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டுக்கு பின்னணியில் நெல்லை விருந்து தான் காரணம் என்கின்றனர். சமீபத்தில் தனது நெல்லை வீட்டில் EPS, ADMK தலைகளுக்கு நயினார் விருந்தளித்தார். அப்போது, தேர்தல் பணிகளை முடக்க திமுக அமைச்சர்களின் பண பலத்தில் கை வைக்கவேண்டும், அதற்கு ரெய்டு தான் ஒரே வழி என இருவரும் டிஸ்கஸ் செய்ததாக கூறப்படுகிறது.
News August 17, 2025
காதலிக்காக மனைவியை துடிதுடிக்க கொன்ற BJP தலைவர்!

காதலியுடன் பழக மனைவி இடையூறாக இருந்ததால், BJP தலைவர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் அஜ்மீரில் ரோஹித் சைனி (28), சஞ்சுவை(25) கொலை செய்து, அதனை கொள்ளை சம்பவம் போல செட்டப் செய்து நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ரோஹித்தின் காதலி ரிது சைனியின் (25) வற்புறுத்தலின் காரணமாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரோஹித் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது.