News April 24, 2025
1,500 பேர் கைது.. அதிரடியில் இறங்கிய காஷ்மீர் போலீஸ்!

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் டேட்டாக்களில் இருப்பவர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் என பலரையும் கைது போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும், ஜம்மு – காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
புதுச்சேரியில் விஜய்யின் கூட்டணி வியூகம்!

அரசியல் தலைவராக புதுவைக்கு முதல் விசிட் அடித்த விஜய், பொதுக்கூட்டத்தில் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால், அங்கு ஆட்சியில் உள்ள NR காங்கிரஸ், CM ரங்கசாமி பற்றி விமர்சனம் ஏதும் வைக்கவில்லை. மாறாக கூட்டத்திற்கு நல்ல பாதுகாப்பு அளித்த CM-க்கு நன்றி என்றார். நீண்ட காலமாக ரங்கசாமியுடன் நெருக்கமாக இருக்கும் விஜய், 2026-ல் அவருடன் கூட்டணி வைக்க வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 9, 2025
பெண்களுக்கு இலவச தையல் மெஷின்: அரசின் சூப்பர் திட்டம்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் TN அரசு பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின்களை வழங்குகிறது. இதனை பெற விரும்பும் பெண்கள் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹72,000-க்கு மிகாமலும், வயது 40-ஐ தாண்டாமலும் இருக்க வேண்டும். முழு தகவல்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். SHARE.
News December 9, 2025
தமிழ் சினிமா பிரபலத்தின் மனைவி காலமானார்

மறைந்த பிரபல கவிஞர் புலமைப் பித்தனின் மனைவி தமிழரசி (83) காலமானார். ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘நான் யார் நீ யார்’ பாடல் எழுதியதன் மூலம் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக மாறிய புலமைப் பித்தன், சட்டப்பேரவை கவிஞராகவும் இருந்தவர். அதிமுகவின் நீண்ட நாள் உறுப்பினரான கவிஞரின் மனைவி தமிழரசி உயிரிழந்த செய்தியை கேட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


