News April 24, 2025
காஷ்மீர் நரகமாகி வருகிறது: சல்மான்

ஜம்மு & காஷ்மீர் போன்ற ஒரு சொர்க்கம், தீவிரவாத தாக்குதல்களால் தற்போது நரகமாகி வருவதாக சல்மான் கான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அதேபோல், மதத்தின் பேரால் இந்த பேரழிவை நடத்த யாருக்கும் உரிமை இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜும் கண்டித்துள்ளார்.
Similar News
News April 24, 2025
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முக்கிய செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் கருப்பு நிறத்துடன் செய்திகளை பிரசுரித்திருந்தன. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு அந்த செய்தித்தாள்களில் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்து கடும் வார்த்தைகளில் தலைப்புகள் வெளியாகி இருந்தன. தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் காஷ்மீர் மக்களின் பேட்டிகளும் அதிகம் இடம் பெற்றிருந்தன.
News April 24, 2025
மயோனைஸ் விற்பனைக்கு தடை: அரசு அதிரடி முடிவு

பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு மாநில உணவு பாதுகாப்புத்துறை திடீர் தடை விதித்துள்ளது. ஓராண்டுக்கு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால், உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 24, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதியில் வரும் ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. டிக்கெட் பெற <