News April 24, 2025

இஷான் கிஷன் மீது ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு

image

MI-க்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆனதை தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ‘#FIXING’ ட்ரெண்டாகி வருகிறது. அவுட் ஆகாமலே எந்தவித சந்தேகத்தையும், ரிவிவ்யூவையும் கேட்காமலும், அம்பயர் அவுட் கொடுக்காத நிலையிலும் அவர் வெளியேறியதால், நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி இவ்வாறு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், BCCI கிஷனை ஒப்பந்தத்தில் எடுத்ததையும் விமர்சித்து வருகின்றனர்.

Similar News

News November 1, 2025

வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

image

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.

News November 1, 2025

ஏன் அர்ஷ்தீப் சிங் இல்லை.. விளாசிய அஸ்வின்

image

Experiment செய்ய வேண்டும் என்றால், பும்ராவை நீக்கிவிட்டு அணியில் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கலாமே என அஸ்வின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பும்ரா விளையாடினாலும், பிளேயிங் XI-ல் அர்ஷ்தீப் இருக்க வேண்டும் என தெரிவித்த அஸ்வின், T20-யில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்பது புரியவில்லை எனவும் கூறினார். அர்ஷ்தீப் சிங் அடுத்த மேட்ச்சில் விளையாடணுமா?

News November 1, 2025

3,740 கோயில்களில் கும்பாபிஷேகம்: சேகர்பாபு

image

திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை 3,740 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர்களை ஓட வைத்த பெருமையும் திமுக அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!