News April 23, 2025

வெயில்: பகல் 12 to 3 வெளியே வர வேண்டாம்

image

நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 24, 2025

ஹய்யா ஜாலி.. இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப். 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதியத்துடன் இறுதித் தேர்வு நிறைவடைகிறது. அதன்பின்னர், அவர்களுக்கும் விடுமுறைதான். கோடை விடுமுறை நிறைவடைந்து ஜுன் 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமே ஜாலிதான்!

News April 24, 2025

40 திருமணம் செய்வேன்.. வனிதா விஜயகுமார் காட்டம்

image

ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகை வனிதா விஜயகுமார் காட்டமாக பதிலளித்துள்ளார். ‘மிஸஸ் & மிஸ்டர்’ பட போஸ்டரை வைத்து இருவருக்கும் திருமணம் என செய்தி பரவியது. இதுகுறித்து பேசிய வனிதா, 40 திருமணம்கூட செய்வேன் என முதலில் கூறினார். பின்னர், ‘4 திருமணம்கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்த வேண்டாம். நான் திருமணம் செய்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை’ எனக் குறிப்பிட்டார்.

News April 24, 2025

பயங்கரவாதம்.. ஓரணியில் நிற்க வேண்டும்: ஷமி

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை கண்டித்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய வன்முறை நமது சமூக கட்டமைப்பை மட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!