News April 23, 2025
வெயில்: பகல் 12 to 3 வெளியே வர வேண்டாம்

நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 17, 2025
தீபாவளி முன்பதிவு.. நாளை காலை 8 மணிக்கு ரெடியா..!

தீபாவளி அக். 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, அக். 17-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், அக்.18-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும், அக்.29-ம் தேதிக்கு வரும் 20-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை காலை ரெடியா இருங்க நண்பர்களே!
News August 17, 2025
உக்ரைன் போரை தொடர ஐரோப்பிய நாடுகள் முயற்சி?

உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை ஃபிரான்ஸ், ஜெர்மனி, UK உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. அதேவேளையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தப்போவதில்லை எனவும், உக்ரைனை NATO அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. ஆனால், நேட்டோவில் சேர்ந்தால், தனது நாட்டின் எல்லையில் ஐரோப்பிய படைகள் நிற்கும் என்று தான் புடின் போரை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 17, 2025
உள்ளாடை விஷயத்தில் இந்த தவறை செய்யாதீங்க

உள்ளாடைகளை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உள்ளாடைகளை பொறுத்தவரை நோய் தொற்றுகளை அதிகரிக்கும் என்பதாலும், அந்தரங்க உறுப்புகளை பாதுகாக்கும் என்பதாலும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னரும் முறையாக துவைக்க வேண்டும். ஈரமான உள்ளாடைகள் தோல் எரிச்சல், தடிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் சூரிய ஒளியில் உலர்த்துவது நல்லது என அறிவுறுத்துகின்றனர். SHARE IT.