News April 23, 2025
கண்கள் மஞ்சளாக உள்ளதா?

கண்கள் மஞ்சளாக மாற 3 காரணங்கள் உள்ளன. 1) கல்லீரல் ரத்த சிவப்பணுக்களை உடைப்பதால், எந்தவொரு கல்லீரல் செயலிழப்பும் சிரோசிஸை ஏற்படுத்தும். இதனால் கண்கள் மஞ்சளாகும். 2) பித்த நாளங்கள் பித்தத்தை எடுத்துச் செல்ல முடியாதபோது, அது படிந்து, கண்கள் மஞ்சள் ஆகும். 3) பித்த நாளத்துடன் சேர்ந்து, கணையத்திலிருந்து வரும் குழாய் சிறுகுடலுக்கு வழிவகுக்கிறது. அது பாதிக்கப்பட்டாலும் கண்கள் மஞ்சளாகும்.
Similar News
News January 8, 2026
செல்போனில் இதை செய்தால் ஜெயில் தண்டனை

டிஜிட்டல் யுகத்தில், இருந்த இடத்திலேயே செல்போனில் எல்லாவற்றையும் அறியலாம். ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடிப் பார்த்தால் ஜெயில் தண்டனை கன்ஃபார்ம். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை ஹேக் செய்வது எப்படி என தேடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், குழந்தைகளின் ஆபாச படங்கள், காப்பிரைட்டை மீறி திரைப்படங்களை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றை செய்தாலும் நீங்கள் கம்பி எண்ணுவது உறுதி.
News January 8, 2026
ஜனநாயகன் வழக்கில் நாளை தீர்ப்பு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னரே தணிக்கைக்குழு படத்தை பார்த்து சென்சார் வழங்கும். அதன்பின், படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. சென்சார் விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளதால், ஜனநாயகன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
News January 8, 2026
பொங்கல் பரிசு பணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயோமெட்ரிக் வைத்து பொங்கல் பரிசுத்தொகை ₹3000-ஐ பெற முடியும். இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், வெளியூரில் இருப்பவர்களுக்கு ₹3000 கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வெளியூரில் இருப்பவர்கள் தாமதமாக வந்தாலும், பொங்கல் பரிசுத் தொகையை எவ்வித இடையூறுமின்றி பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.


