News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை & தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News April 24, 2025
ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.
News April 24, 2025
என்னை மாற்றியது இவர்தான்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

நிகழ்ச்சிகளில் THUG பதில் அளிப்பதிலும், குறும்பு சேட்டை செய்வதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கெட்டிக்காரர். முதலில் INTROVERT ஆக இருந்த தன்னை EXTROVERT ஆக மாற்றியதே இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்தான் என அவர் தெரிவித்துள்ளார். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி. மகாதேவன் உள்ளிட்டோரிடம் வேலை செய்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், டி.ராஜேந்தர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தன்னை மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
ரோஹித்துக்கு வந்த சோதனை.. 9 வருஷத்துல இதுதான் ஃபர்ஸ்ட்!

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் அரைசதம் விளாசுவது 9 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம். CSK, SRH அணிகளுக்கு எதிராக தற்போது தொடர்ச்சியாக அரைசதம் அடித்த அவர், இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் KKR, RPS அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்திருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ரோஹித் சர்மாவிற்கு இது ஒரு மோசமான சாதனைதான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?