News April 23, 2025
இந்திய எல்லையில் வட்டமிடும் பாக். போர் விமானங்கள்?

இந்திய எல்லை பகுதிகளில் பாக். போர் விமானங்களை நிறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லாஹூர், ராவல்பிண்டி விமானப்படை தளங்களில் போர் விமானங்கள் நகர்த்தப்படும் ஸ்க்ரீன்ஷாட்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல, இந்தியா திடீரென தாக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
Similar News
News August 17, 2025
கூட்டணி குறித்து ராமதாஸே முடிவெடுப்பார்

2026 தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், கூட்டணியை முடிவு செய்ய ராமதாஸுக்கே முழு அதிகாரமும் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாமகவில் புதிய விதி 35 உருவாக்கப்பட்டு, இதன்படி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து ராமதாஸே முடிவெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசிய அஜித்: ஏ.ஆர்.முருகதாஸ்

நடிகர்கள் நேரத்திற்கு சூட்டிங் வருவதே பெரிய விஷயமாக மாறிப்போன நிலையில், நடிகர் அஜித் விபத்தில் அடிப்பட்டு “ஹாஸ்பிடலில்” சிகிச்சையில் இருந்தபோது ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். நான் உட்பட பல புதுமுக இயக்குநர்களை அஜித்தான் அறிமுகப்படுத்தினார். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்துள்ளார். எளிதாக இந்த இடத்திற்கு அவர் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
News August 17, 2025
யார் பாமக தலைவர்: ராமதாஸா? அன்புமணியா?

விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.