News April 23, 2025

தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

image

சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவி வீட்டு பாடம் செய்யாமல் வந்ததால், ஆசிரியை, 400 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இதனால், மாணவியின் உடல்நலம் பாதித்ததாக, மாணவியின் தாயார், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 2017ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய குழு, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதை ஆசிரியையிடம் இருந்து வசூல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

சிவகங்கையில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. சிவகங்கை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<> இங்கே கிளிக் செய்து<<>> நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News August 13, 2025

சிவகங்கை: உதவி எண்கள் SAVE IT..!

image

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த உதவி எண்களை SAVE பண்ணி வச்சிக்கோங்க
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பெண்கள் பாதுகாப்பு – 191
▶️ காவல் மற்றும் ஆம்புலன்ஸ் – 112
▶️ இணைய பாதுகாப்பு – 1930
தேவையான அவசர காலங்களில், இந்த எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி கிடைக்கும். இந்த தகவலை SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க..!

News August 13, 2025

சிவகங்கை: மதுபான கடைகள் மூடல்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!