News April 23, 2025
தோஷம் தீர்க்கும் சீனிவாசப் பெருமாள்!

திண்டுக்கல் : ரங்கநாதபுரம் மலையில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள மூலவரை ’கல்யாண சீனிவாசன்’ என்றும் அழைப்பர். இந்தப் பெருமாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், இக்கோயிலில் நெல்லி இலைகளை வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பித்ரு தோஷங்களும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள் . பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 8, 2025
திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சிறுவன் உட்பட 3 பேர் கைது!

திண்டுக்கல்: சிறுமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) விளையாட்டு போட்டி நடத்தினார். அப்போது, சிவா (22), பிரகாஷ் (27) ஆகியோர் கேலி செய்தனர். இவர்களுக்கும் சுரேஷ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இரவு சுரேஷ் வீட்டில் சிவா, பிரகாஷ், 14 வயது சிறுவன் சென்று பெட்ரோல் குண்டு வீசினர். சுரேஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது கொலை மிரட்டல் விடுத்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
News November 8, 2025
வேடசந்தூர் அருகே 24 வயது வாலிபர் விபரீத முடிவு!

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு, முருநெல்லிக்கோட்டை பகுதியில் பழையகோட்டையைச் சேர்ந்த சண்முகம் மகன் பூபதிராஜா (வயது 24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையம் விரைந்து சென்று, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 7, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (நவ-07) சமூக வலைதளம் மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுஇடங்களில் இலவச Wi-Fi இணைப்புகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. இல்லையெனில் செல்போன்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பிறரால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.


