News April 23, 2025
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
தென்காசி: அரசு பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்

தமிழக அரசின் புதிய திட்டமான, தமிழக பேருந்துகளில், யு.பி.ஐ (UPI) மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளும் முறை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலும், தென்காசி, சங்கரன்கோவில் டிப்போவில் இருந்து வரும் பேருந்துகளில் UPI மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
News April 23, 2025
ராயகிரி அருகே 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ராயகிரி அருகே TN 79 E 3274 என்ற எண் கொண்ட Tata Ace வாகனத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் மகன் கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 23, 2025
தென்காசி: அங்கன்வாடியில் வேலை.. இன்றே கடைசி

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <